ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் கைதாகி சிறையிலடைப்பு !

Spread the love

பணமோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக துனிஷியா நாட்டின் முன்னாள் பிரதமர் ஹமாடி ஜெபாலி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

வடக்கு ஆப்பிரிக்க நடானா துனிஷியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2013 வரை பிரதமராக ஹமாடி ஜெபாலி பதவி வகித்து வந்தார். மேலும் நாட்டின் பிரதான கட்சியான எனக்தாவின் பொதுச்செயலாளராகவும் அவர் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் ஜெபாலி பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஆட்சியில் இருந்த போதும் பல்வேறு ஊழல்களில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனால் நாட்டு அதிபர் கைஸ் சயீத் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சியை கலைத்து, ஜெபாலியின் எம்.பி. பதவியை நிறுத்தி வைத்தார். பின்னர் எனக்தா கட்சியின் மூத்த உறுப்பினர்களின் வீட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அப்தெல் கரீம் ஹரோனி, ராச்சேத் கானோசி போன்ற எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைத்தனர்.

இந்நிலையில் போலீசார் 74 வயதான ஜெபாலியின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து அவரை கைது செய்த போலீஸார், துனிசில் உள்ள சிறைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours