ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நிலவில் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியது. இதேபோன்று, கடந்த 10 ஆம் தேதி, லூனா-25 என்ற விண்கலத்தை ரஷ்யா விண்ணில் செலுத்தியது. சந்திரயானுக்கு முன்பாகவே, நாளை நிலவின் தென்துருவத்தில் லூனாவை தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டது.
இதில், கடந்த 17 ஆம் தேதி லூனா விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. தொடர்ந்து, அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக் கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விண்வெளி நிறுவனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours