உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

Spread the love

வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

இது அடுத்த இரு தினங்களில் ஆந்திர மற்றும் ஓடிஷா கரையை நோக்கி நகரும் என்று தெரிகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாடு. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சென்னை உட்பட பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த ஐந்து நாட்களில் ஒடிசாவில் கனமழை முதல் மிகக் கனமழையுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours