பௌர்ணமி தினமான நேற்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் அன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறும்.
அதன் அடிப்படையில் பௌர்ணமி தினமான நேற்று ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
கருடவாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
4 மாட வீதிகள் காட்சியளித்த மலையப்பருக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
+ There are no comments
Add yours