உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள் என கர்நாடக துணை முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
வறட்சி காலத்தில் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை வேண்டாம் எனவும் போதுமான மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும் எனவும் கூறிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கடந்த வருடம் 400 டி.எம்.சி உபரி நீர் கடலுக்கு சென்றது எனக் கூறியுள்ளார். மேகதாது அணை இருந்தால் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்க முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள் எனவும் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது எனவும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours