தாமரை, சூரியன் நேரடியாக போட்டியிட்டால் என்டிகே வாபஸ்…!

Spread the love

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாரத் என அவர்கள் நாட்டிற்கு பெயர் வைத்துள்ளார்கள், ஆனால், எங்கள் நாடு தமிழ்நாடு. வேறு பெயரை வைத்து விட்டால் எல்லாம் மாறி விடுமா?, எல்லாரும் ஒரே நாடு என்றால் கர்நாடகா ஏன் காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு தர மறுக்கிறது. இன்று பயிர் காய்கிறது, நாளை வயிறு காயும். ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்ததாக கூறினார்.

முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது. எனவே, பாரத் என்றாலும், சூரத் என்றாலும் கவலையில்லை, எனக்கு தமிழ்நாடு தான். இந்து என்ற பெயரும் ஆங்கிலேயர் வைத்தது தானே, அதையும் மாற்ற வேண்டியது தானே. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் வைத்தது தான், அப்படி பார்த்தால் நாடே அவர்கள் உருவாக்கி வைத்தது தானே. பெயரை மாற்றுவதால் ஒரு பலனும் இல்லை, 150 லட்சம் கோடி கடன் இருக்கிறது தள்ளுபடி செய்து விடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

நாட்டின் பெயரை மாற்றுவதால் எல்லாருக்கும் கல்வி, எல்லாருக்கும் வேலைவாய்ப்பு, பசியில்லாத பாரதம் என இதெல்லாம் உருவாகி விடுமா?, ஏதோ தேர்தல் வரும் நேரத்தில் இப்படியெல்லாம் நடக்குது. ஏன் ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியது தானே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் வருவதால் சிலிண்டர் விலை குறைகிறது, சட்ட விதிகளில் பெயர்கள் மாறுகிறது, சந்திரயான் சரியாக நிலவில் இறங்குகிறது, சூரியனை நோக்கி ஆதித்யா செல்கிறது என விமர்சித்தார்.

என்னமோ அதிகார திமிரில் ஆடி வருகிறார்கள் எனவும் கூறினார். மேலும் சீமான் பேசுகையில், இந்தியா என்பது ஒரே நாடு அல்ல, தேர்தல் அரசியலமைப்பு சட்டமும் சொல்லவில்லை. ரேடியோவே ஆல் இந்திய ரேடியோ தான், இந்திய ரேடியோ கிடையாது. பல மாநிலங்கள், தேசங்களில் ஒன்றியம் தான் மாநிலங்களிவை. அப்படி இருக்கும்போது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே தேர்வு என எப்படி சொல்ல முடியும், ஒரே நாடு என்றால் காவிரியில் ஏன் தண்ணீரை பெற்று தர முடியவில்லை, ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்.

எல்லாம் மொழிக்கும் ஒரு தேசியம் நிலம் இருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டையும் தனதாக்கிக்கொள்ள துடிக்கிறார்கள். இதனால் தான் ஒரே தேசம் பாரத் என கூறுகிறார்கள். இவர்களை அடித்து விரட்டும் காலம் விரைவில் வரும் என கடுமையாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ராமேஷ்வரத்தில் தாமரை, சூரியன் நேரடியாக போட்டியிட்டால் எனது வேட்பாளரை திரும்ப பெறுவேன்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுங்கள், நான் முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தருகிறேன். அமைச்சர் உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் 100 கோடி தருகிறேன். தலையை வெட்டு, நாக்கை வெட்டு என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல, கசாப்பு கடைக்காரர் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours