ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாலை விபத்தில் பலி- நெல்லையில் கோரம்

Spread the love

நெல்லை: நெல்லை தச்சநல்லூரில் லாரியை முந்திச் செல்ல முயன்ற போது, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த 2 இரண்டு குழந்தைகள், அவர்களது தந்தை மற்றும் பாட்டி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கங்கைகொண்டான் ராஜா புதுக்குடியை சேர்ந்த அம்மா, மகன் மற்றும் பேரக் குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் வண்ணார்பேட்டை நோக்கி சென்றுள்ளனர். மணி மூர்த்தீஸ்வரம் விலக்கு அருகே சென்றுக் கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.

சிறிது அளவு லாரியை முந்தி சென்ற இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் வேகமாக சென்றுக் கொண்டிருந்த லாரி இடித்துள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours