மத்திய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பு; தெரியுமா?

Spread the love

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஸ்வயம் பிளஸ் என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து கல்வி கற்று சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்வயம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஐஐடி உடன் இணைந்து மத்திய அரசு ஸ்வயம் பிளஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் இணைந்து நீங்கள் கல்வி கற்க வேண்டுமென்றால் முதலில் பதிவு செய்ய வேண்டும்.

இதில், மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ, எல்&டி உள்ளிட்ட நிறுவனக்களும் இதில் பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்ன படிக்க வேண்டும் என்ன என்ன திறன்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை பட்டியலிடுகின்றன. அதன்படி பாடங்களை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் விரைவில் பணியில் சேருவதர்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
பொறியியல், கணினி அறிவியல், உடல் நலம், சுற்றுலா, இந்திய அறிவியல் அமைப்பு என பல பாடப்பிரிவுகள் இதில் உள்ளன. இதில் பயின்ற மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட முன்னணி கல்லூரிகளில் இணைந்து டிப்லமோ முடித்து சான்றிதழும் பெற்றுக்கொள்ளலாம்.

இதில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்கள் என்ற இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours