10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் 3 மாவட்டங்கள் எது தெரியுமா?

Spread the love

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் நடைபெற்ற 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

மொத்தம் 9.10 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4 லட்சத்து 22 ஆயிரம் மாணவிகளும், 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்களும் அடங்குவர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில், அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகித்தது. அடுத்ததாக சிவகங்கை மாவட்டம் 97.02% தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராமநாதபுரம் மாவட்டம் 96.36% தேர்ச்சியுடன் 3ம் இடம் வகிக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours