தென்காசியில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; இந்தத் தேதியை நோட் பண்ணுங்க!

Spread the love

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2023 2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (26.04.2024) காலை 11.00 மணிக்கு இ.சி.ஈ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி படிப்புகளை பயின்று பயன் பெறுவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச்செயலகம் மற்றும் இயக்குநரகம் உத்தரவிற்கு இணங்க Mass Movement for Transformation (MMT) and NUTURE Bhel என்ற தன்னார்வ அமைப்பின் கல்வியாளர்களின் நல் வழிகாட்டுதலுடன் நடைபெற உள்ளது.

எனவே 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பட்டியல் வெளியீட்டிற்காக காத்திருக்கின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்” என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தனது செய்திக் குறிப்பில் மேலும் கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours