நிர்வாக சீர்கேடுமிக்க ஒரு ஆட்சி… வானதி சீனிவாசன் !

Spread the love

திமுக எம்.பி. ஆ. ராசாவை கடுமையாக விமர்சித்துள்ளார் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து ஆ. ராசா அவதூறாக பேசிய நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. ஆ. ராசா அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரை பற்றி மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசினார். “நான் எல்லாம் எம்ஜிஆரை மதிக்கிறதே இல்ல. கலைஞர் சொல்வாரு அவரோட நண்பருனு. உங்க நண்பர் என்றால் உங்களோட வெச்சிக்கோங்கனு நான் சொல்வேன். வெளிநாட்டில் இருந்த வந்தவனுக்கு நமது மண்ணை மதிக்கும் மாண்பு தெரிந்திருக்கிறது. ஆனால், இங்கிருந்து வந்த ‘__‘ எம்ஜிஆருக்கு அது தெரியவில்லை” என ஒரு இழிவான சொல்லை பயன்படுத்தி கூறினார்.

ஆ. ராசாவின் இந்த பேச்சு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆ. ராசாவை அதிமுகவினர் மானாவாரியாக திட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், நீலகிரியில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருப்பது நிர்வாக சீர்கேடுமிக்க ஒரு ஆட்சி. ஊழலுக்கு உறுதுணையாக இருக்கின்ற ஆட்சி. வாரிசு அரசியலை தூக்கிப் பிடிக்கின்ற ஆட்சி. இந்த நீலகிரி தொகுதி எம்.பி. ஆ. ராசாவின் பேச்சை கேட்டிருப்பீர்கள். இப்போது மட்டுமல்ல எப்போதுமே அருவருக்கத்தக்க பேச்சை தான் அவர் பேசுவார். அவரை A. ராசா என்று சொல்வதை விட இழிவு (Abusive) ராசா என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

ஆக்கப்பூர்வமான நேர்மையாக இருக்க வேண்டிய அரசியல் சூழலை, அருவருப்பாக மாற்ற ஆ. ராசா ஆசைப்படுகிறார். ஆனால் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் ஒருபோதும் அதை விரும்ப மாட்டார்கள். விரைவில் ஆ. ராசாவுக்கும், அவரது பேச்சுக்கும் மக்கள் முடிவுரை எழுதுவார்கள்” என வானதி சீனிவாசன் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours