புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தம்!

Spread the love

அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் பலர் அலங்கோலமான சிகை அலங்காரத்தில் பள்ளிக்கு வருகை தருவது வாடிக்கையாய் இருந்திருக்கிறது. இதனை கண்டித்த ஆசிரியர்களின் பேச்சையும் அவர்கள் சட்டை செய்யவில்லை.

பொறுத்து பார்த்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட, இன்று மோசமான சிகை அலங்காரம் கொண்டிருந்த அனைவருக்கும் பள்ளி வளாகத்திலேயே முடி திருத்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் மாணவர்களுக்கு தலைமுடியை ஒழுங்காக பராமரிப்பதன் அவசியத்தை பற்றி விளக்கியிருக்கிறார் தலைமை ஆசிரியர்.

புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே தலைமுடி திருத்தும் செய்து அனுப்பியது பல்வேறு தரப்பினரிடையே பாராட்டை பெற்று வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours