ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு ரூ.1,000: தமிழக அரசு ஆலோசனை!

Spread the love

2024 -ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன், ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ரேஷனில் பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு பொருட்கள் பலதும் தரமற்று இருந்ததாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 வட மாவட்டங்கள் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. அதேபோல், தென் மாவட்டங்களும் கனமழையால் ஏற்பட்ட பெரிய பாதிப்புகளில் சிக்கி தத்தளித்தது. அந்த மக்கள் அந்த பாதிப்புகளில் இருந்து மீளாமல் உள்ளனர். அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும் என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

அதாவது, இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 2-வது வாரம் வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதுதொடர்பாக முதலமைச்சருடன் கலந்து பேசி விரைவில் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மேலும், பொங்கலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையான 1,000 ரூபாயும் 2 நாட்கள் முன் கூட்டியே, அதாவது ஜனவரி 13-ம் தேதியே வழங்க திட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக தமிழக குடும்பங்களுக்கு அடுத்த மாதம் 2 முறை ரூ.1000 பணம் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours