ஸ்மார்ட் மொபைல் போன் யூஸர்கள் அனைவரும் புதிய ஃபோனை வாங்கி சில வருடங்களில் அதன் செயல் திறன் குறைவதை கட்டாயம் உணர்ந்து இருப்பார்கள்.
இது போன்ற சமயங்களில் போனை முழுவதுமாக ரீசெட் செய்வது அதன் செயல் திறனை அதிகரிப்பதற்கு உதவும். மேலும் ஒரு முறை ஃபோனை ரீசெட் செய்து விட்டால், அதன் மென்பொருள் ஃபோனை வாங்கிய நேரத்தில் எவ்வவளவு வேகமாக இயங்கியதோ அதே போல் வேகமாக இயங்க வாய்ப்பு உண்டு.
இந்நிலையில் ரீசெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில், உங்களது ஃபோனில் நீங்கள் ஃபேக்டரி ரீசெட் செய்வதற்கு முன்னர் முதலில் அதில் உள்ள அனைத்து டேட்டாவையும் பேக்கப் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உங்களது போனை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் உங்களது ஃபோனின் செட்டிங்ஸ் ஓபன் செய்து அதில் சிஸ்டம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு ஸ்க்ரோல் செய்து ரீசெட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
- தற்போது அதில் “எரேஸ் ஆல் டேட்டா” என்ற ஆப்ஷன் அல்லது “ஃபேக்டரி ரிசெட்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- பிறகு உங்களது ஃபோனின் பின் நம்பரை என்டர் செய்யவும்.
- இப்போது ரீசெட் ஆபரேஷனை உறுதி செய்தால் உங்களது போன் முழுவதுமாக ரீசெட் செய்யப்படும்.
சில சமயங்களில் மென்பொருள் கோளாறு காரணமாக உங்களது ஃபோனின் செட்டிங்ஸை உங்களால் ஆக்சஸ் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அது போன்ற சமயங்களில் ரெக்கவரி மோடை பயன்படுத்தி போனை ரீசெட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours