இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்த நடிகர் தனுஷ்!

Spread the love

நடிகர் தனுஷ் சென்னையில் இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

மக்களைவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பொதுமக்களுடன் திரைப்பிரபலங்களும் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித் முதல் நபராக காலை 7 மணிக்கே திருவான்மியூரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதனை அடுத்து நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், ராதிகா, சரத்குமார், குஷ்பு எனப் பலரும் திரளாக காலை ஏழு மணி முதலே தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் நடிகர் தனுஷூம் இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். சென்னை, டிடிகே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் காலை 8 மணியளவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் தனுஷ். காரில் பவுன்சர்களோடு வந்த தனுஷ் வாக்களித்துவிட்டு கேமராவில் சிரித்த முகத்துடன் அதை பதிவு செய்துவிட்டு அமைதியாக கிளம்பிச் சென்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours