ஏர் இந்தியா விமானத்தில் பாலியல் சீண்டல் – பிரபல நடிகை புகார்!

Spread the love

மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போது சக பயணியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டதாக மலையாள திரையுலகில் பிரபல நடிகை திவ்யப் பிரபா தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் பிரபல நடிகையான திவ்யப் பிரபா, கடந்த செவ்வாய்க்கிழமை மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா ஃபிளைட்டில் பயணம் செய்துள்ளார். அப்போது சக பயணியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் குடித்து விட்டு தனக்கு அருகில் அமர்ந்திருந்த சகபயணி ஒருவர், தன்னுடன் காரணம் இன்றி விவாதம் செய்ததோடு, தன்னை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து, விமானப் பணிப்பெண்ணிடம் உடனடியாக புகார் அளித்ததை அடுத்து அவர்கள், அந்த நபரின் இருக்கையை மாற்றினர் என கூறி உள்ள அவர், விமான நிறுவனங்கள் விமானங்களில் பயண நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதே வேளையில், சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்’ என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours