பத்திரிகையாளரிடம் முகம் சுளிக்கும் பேச்சு.. விக்ரமுக்கு வலுக்கும் எதிர்ப்பு.

Spread the love

‘தங்கலான்’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில், பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் விக்ரம் சொன்ன பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான புரோமோஷன் பணிகளுக்காக படக்குழுவினர் நேற்று மதுரை சென்றிருந்த நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நடிகர் விக்ரம் சொன்ன பதில் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

‘விஜய், அஜித் என மற்ற முன்னணி நடிகர்களோடு ஒப்பிடும்போது உங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் குறைவாக இருக்கிறதே?’ என அவர் எழுப்பிய கேள்விக்கு, “என்னுடைய ரசிகர்கள் பட்டாளம் பற்றி நீங்கள் ‘தங்கலான்’ படம் திரையரங்குகளில் வெளியாகும் போது தெரிந்து கொள்ளுங்கள். நான் ஏற்கனவே முன்னணி இடத்திற்கு வந்துவிட்டேன். ‘தூள்’, ‘சாமி’ போன்ற கமர்ஷியல் படங்களும் என்னால் செய்ய முடியும். ஆனால், அதை எல்லாம் விடுத்து அடுத்தக் கட்டத்திற்கு சினிமாவை எடுத்துப் போக என்ன வழி என்ற என் முயற்சிதான் ‘தங்கலான்’ போன்ற படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்று பேசினார்.

மேலும், அந்த பத்திரிக்கையாளரிடம் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது, ‘என் பெற்றோர்தான்’ என்றார். அதற்கு விக்ரம், ’ஏன் உங்கள் மனைவி குறித்துப் பேசவில்லை? அவர் ஓடிப் போய்விட்டாரா?’ என்று கேட்டது அங்கிருந்த பலரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours