சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில் மறுபடியும் வெளியாகிறது நயன்தாராவின் ‘அன்னபூரணி’

Spread the love

சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், நடிகை நயன்தாராவின் ‘அன்னபூரணி’ திரைப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது ‘அன்னபூரணி’ திரைப்படம். இதில் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்படியான காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியான போது, படத்தை ஓடிடியில் இருந்து நீக்க வேண்டும் எனச் இந்து அமைப்புகள் சர்ச்சைக் கிளப்பின.

இதனால், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து படம் நீக்கப்பட்டதுடன் படத்தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவினரும் மன்னிப்புக் கேட்டனர். இப்போது அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் உள்ள ரசிகர்கள் படத்தை சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் நாளை முதல் பார்க்கலாம் என ‘அன்னபூரணி’ படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours