சிறையை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் ‘சொர்கவாசல்’

Spread the love

நடிகர் ஆர்ஜே பாலாஜி, சூர்யாவின் 45-வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதற்கிடையே சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘சொர்கவாசல்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதன் கதையை தமிழ்ப்பிரபா, அஷ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து சித்தார்த் விஸ்வநாத் எழுதியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசை அமைக்கிறார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ், பல்லவி சிங் தயாரிக்கின்றனர்.

இதில் நட்டி, சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சிறையை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், சிறைக்குள் இருப்பவர்களின் வாழ்வியல் பயணத்துக்கு அழைத்துச் செல்லும் என்கிறது படக்குழு.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours