நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
வாணி கணபதி ஒரு பரத நாட்டிய கலைஞர். இவரது நிஜப்பெயர் வாணி பாரதி. அவருடைய மூன்று வயதில் இருந்து அவரது நடன பயிற்சியை தொடங்கினார் வாணி கணபதி.
கல்கத்தாவில் இருந்து பம்பாய்க்கு குடியேறிய பின்னரும் தன்னுடைய நடன பயிற்சியை விடாமல் தொடர்ந்துள்ளார் வாணி கணபதி. படித்து கொண்டிருக்கும் போதே பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
பரத கலையின் மூலம் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ள வாணி பெங்களூரில் சஞ்சாரி என்ற பெயரில் நடனப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.
1973-ல் பியாஷி நாடி என்ற இந்தி படத்தில் அறிமுகமான வாணி, 1975-ம் ஆண்டில் தமிழில் இயக்குநர் நாகராஜ் இயக்கிய மேல்நாட்டு மருமகள் என்ற படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார்.
இந்த படத்தின் போது அவர்களுக்கு இடையே மலர்ந்த காதல் விரைவில் திருமணத்தில் முடிந்தது. 10 வருடங்களுக்கு பின்னர் அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கமல்ஹாசன் சரிகாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, வாணி கணபதியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அவருடைய 73 வயதிலும் அழகு குறையாமல் ஃபிட்னசுடன் இருக்கிறார் வாணி.
தன்னுடைய நடன பள்ளி மூலம் கிடைக்கும் வருவாயில் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் இவர் நடனம் கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கு தொடர்ந்து அவருடைய நடன பள்ளியின் மூலம் இலவசமாக பயிற்சியும் கொடுத்து வருகிறார்.
+ There are no comments
Add yours