இந்தியாவில் அறிமுகமாகும் யோகி பாபு !

Spread the love

தமிழில் பிசி நடிகராக இருக்கும் யோகிபாபு, காமெடி மற்றும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். மலையாளப் படத்தில் ஏற்கெனவே நடித்துவிட்ட அவர், ‘தி ராஜா சாப்’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இதில் பிரபாஸ் ஹீரோ. இந்நிலையில் முதன் முறையாக அவர் இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடித்து 2007-ல் வெளியான ஹாரர் காமெடி படம், ‘பூல் புலையா’. இதன் அடுத்த பாகம், கார்த்திக் ஆர்யன் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது. அனிஸ் பாஸ்மி இயக்கி இருந்த இதன், 3 வது பாகம் இப்போது உருவாகிறது. டி-சீரீஸ் தயாரிக்கும் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்க யோகிபாபுவிடம் பேசி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours