பப்பிற்குச் சென்ற இளம்பெண் சுயநினைவு இல்லாத நிலையில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட கத்தியால் குத்தப்பட்டு தெருவில் வீசப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த இளம்பெண், கோரமங்களாவில் உள்ள ஒரு பப்பிற்கு டிச.12-ம் தேதி சென்றுள்ளார். இதன் பின் அவர் மயக்கமடைந்துள்ளார். சுயநினைவு திரும்பிய போது ஆடுகுடியில் உள்ள தேவகவுடா லே அவுட் அருகே கிடந்துள்ளார். உடல் முழுவதும் பலாத்காரம் செய்யப்பட்ட காயங்கள் மற்றும் கத்திக்குத்து காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக உள்ளூர் மக்களின் உதவியுடன் காவல் துறைக்கு அவர் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து விரைந்து வந்த கோரமங்களா போலீஸார், இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், சம்பத்ந்தப்பட்ட பப்பில் இருந்த 60 சிசிடிவி கேமராக்களையும் சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது வெளியாகி பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours