951 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு- 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்

Spread the love

மதுரை: சரக்கு வாகனத்தில் 951 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மதுரை கோச்சடை பகுதியில் கடந்த 15.2.2023-ல் சரக்கு வாகனத்தில் 951 கிலோ அளவுக்கு கஞ்சா கடத்திய வழக்கில் மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த பிரபாகரன் (23), எல்லீஸ் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் (34), கோ.புதூரைச் சேர்ந்த ஜெயக்குமார் (36) ஆகியோரை மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.விஜயபாண்டியன் வாதிட்டார். விசாரணை முடிவில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சரக்கு வாகனத்தில் 951 கிலோ கஞ்சாவை கடத்தியதை அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டதால் 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் இன்று தீர்ப்பளித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours