11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இசை ஆசிரியர் கைது

Spread the love

சென்னை: சென்னையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக தி.நகர் காவல் மாவட்டத்துக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின், கீழ் தளத்தில் மழை நீர் புகுந்தது. இதனால் அங்கு தங்கியிருந்த குடும்பத்தினரை, மாடியில் காலியாக இருக்கும் ஒரு அறையில் சென்று தங்குமாறு குடியிருப்பு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாடியில் உள்ள அறையை, தங்கள் 11 வயது மகளுடன் பெற்றோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அதற்கு அடுத்த அறையில் குடியிருந்த 45 வயதுடைய இசை ஆசிரியர் ஒருவர், அங்கு சென்று சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். பின், தனது அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்று இசைக்கருவிகளை காண்பித்துள்ளார்.

சிறிது நேரத்தில் கண் கலங்க பெற்றோரிடம் வந்த சிறுமி, இசை ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து, விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்த மகளிர் போலீஸார், இசை ஆசிரியரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours