ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இருமடங்கு உயர்வு !

Spread the love

சிட்னி: வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் வீட்டு வசதி துறையில் கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருவதாக தகவல். இதற்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் எனச் சொல்லப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது.

அதன்படி இதுநாள் வரையில் 710 ஆஸ்திரேலிய டாலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் 1,600 ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.89,118 ஆகும். மேலும், பார்வையாளர் விசா, தற்காலிக பட்டதாரி விசா வைத்துள்ளவர்கள் ஆன்ஷோரில் மாணவர் விசா விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு வரும் இந்த விசா மாற்றங்கள் சர்வதேச கல்வி முறையின் தரம், சிறந்த குடியேற்ற நகர்வுகளை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வெளியான குடியேற்றம் சார்ந்த தரவுகள் தான் இதற்கு காரணம் என தெரிகிறது.

மேலும், வெளிநாட்டு மாணவர்கள் விசா நீட்டிப்பை தவிர்க்கும் வகையிலும் நகர்வுகளை ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆஸி.யில் கல்வி பயில்வது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த 2022-2023 நிதியாண்டில் சுமார் 36.4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக இந்த துறை தனது மதிப்பாகக் கொண்டு இருந்தது.

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா உயர்த்தியுள்ளது. அதனுடன் இந்த பிரிவில் போட்டியிடும் அமெரிக்கா மற்றும் கனடாவை காட்டிலும் இந்த கட்டணம் அதிகம். அங்கு முறையே 185 மற்றும் 110 டாலர்களாக விசா கட்டணம் உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours