பாகிஸ்தானின் 33வது பிரதமராக ஷெபாஷ் ஷெரீப்!

Spread the love

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று 23 நாள்களுக்குப் பிறகு ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக இன்று தேர்வுசெய்யப்பட்டார்அவர் நாளை பதவியேற்க உள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்றதுஇதில் முன்னாள் பிரதமரானஊழல்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் தெஹ்ரீக்இன்சாஃப் கட்சி (பிடிஐதேர்தலில்போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இதனால் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றிபெற்றனர்இதேபோல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்என் கட்சிபாகிஸ்தான் மக்கள் கட்சி(பிபிபிஆகியவையும் கணிசமான இடங்களைப் பிடித்தனஆனால்எந்த கட்சியும் ஆட்சி அமைக்கத் தேவையானபெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை.

இந்நிலையில் பிடிஐ கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முன்வரவில்லைஅதே நேரத்தில் பிஎம்எல்என்பிபிபிகட்சிகள் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தனஆனால்பிரதமர் பதவிஅதிகாரப் பகிர்வில்இருகட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படாமல் கடந்த 23 நாள்களாக இழுபறி நீடித்ததுஇந்நிலையில் நவாஸ்ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமர் பதவிக்கு இன்று தேர்வானார்அந்நாட்டு நாடாளுமன்றத்தில்அவருக்கு மொத்தம் உள்ள 336 இடங்களில் 201 உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்தன.

இதன்மூலம் பாகிஸ்தானின் 33வது பிரதமராக நவாஸ் ஷெரீப் நாளை பதவியேற்க உள்ளார்மேலும் ஷெபாஷ் ஷெரீப்கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை ஏற்கெனவே பிரதமர் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours