அந்தமான் அருகே ஆழ்கடலில் நிலநடுக்கம்… கட்டிடங்கள் குலுங்கியதால் பதற்றம்!

Spread the love

அந்தமான் நிகோபர் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில நாட்களாக நிலநடுக்கங்கள் அதிகளவில் உணரப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் உயிர்சேதம் உருவாகியுள்ளது. இதையடுத்து உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் தொடர்பான பதிவுகளை விஞ்ஞானிகள் கவனத்துடன் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்தமான் நிகோபர் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக கடலோரப் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours