வங்கதேசத்தை விட்டு வெளியேறினார் பிரதமர் ஷேக் ஹசீனா.

Spread the love

ஷேக் ஷசீனா அரசுக்கு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கதேச பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா.

கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், போலீஸை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் வங்கதேச போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீஸார் உயிரிழந்தனர்.

ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவே போராட்டக் குழுவினரின் முக்கியமான கோரிக்கையாக இருந்தது . நாட்டு மக்களிடையே ராணுவத் தளபதி இன்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ராணுவம் அங்கு இடைக்கால அரசு அமைக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வங்கதேச பிரதமர் இல்லத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறினார் என்று கூறப்படுகிறது. அவர் தலைநகர் டாக்காவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை நோக்கி பயணம் என தகவல் வெளியாகியிருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours