8 முறை வாக்களித்த இளைஞர் கைது!

Spread the love

உத்தரபிரதேசத்தின் எட்டாவில் 8 முறை வாக்களித்த இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும், அவர் வாக்களித்த வாக்குச் சாவடிக்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், எட்டா மாவட்டம், கிரியா பமரன் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன் சிங். இவர் அங்குள்ள ஃபரூகாபாத் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்தவராவார். இந்நிலையில் இத்தொகுதிக்கு கடந்த மே 13ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

அப்போது, ராஜன் சிங், 8 முறை வாக்களித்துள்ளார். மேலும் இதனை அவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்நிலையில் இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பிற அரசியல்வாதிகளும் தங்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள பதிவில், இது தவறு என தேர்தல் ஆணையம் உணர்ந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அது (தேர்தல் ஆணையம்) பாஜகவின் பூத் கமிட்டியை போன்றதாகி விடும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பல முறை வாக்களித்த ராஜன் சிங்கை, அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே உத்தரப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா கூறுகையில், ராஜன் சிங் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எட்டா மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமீறல் நடந்த வாக்குச் சாவடியில் இருந்த அனைத்து தேர்தல் பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours