மத்திய அரசு மூலம் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அபார் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த அடையாள அட்டைக்கு அபார் அடையாள அட்டை என்று பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த அபார் அட்டை மூலம் குறிப்பிட்ட மாணவர்கள் எங்கே படிக்கிறார், கல்லூரி செல்கிறார்களா? படிப்பை பாதியில் நிறுத்துகிறாரா? என்பதை கண்காணிக்க முடியும்.
மேலும், பள்ளி இடைநிற்றலை இந்த அபார் அட்டையின் மூலம் தடுக்க முடியும் என்பதால் மத்திய அரசு மூலம் இந்தியா முழுக்க அறிமுகப்படுத்த உள்ளது. ஆதார் அட்டை போல மாணவர்களின் முன்னேற்றங்களை இதன் மூலம் கண்காணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும். அதன்படி, மாணவர்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை கண்காணிக்க வாழ்நாள் முழுவதும் நிரந்தர அடையாள எண் வழங்கப்படும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும். மாணவர்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை கண்காணிக்க இது உதவும்.
12 இலக்க ஆதார் அட்டை ஒருவரின் தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும். இது மக்களின் பயோமெட்ரிக் மற்றும் அடையாள தரவுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்திய குடிமக்கள் மட்டும் பெறக்கூடிய ஒரு அடையாள அட்டையாகும்.
தற்போது மாணவர்களுக்காக, வழங்க திட்டமிட்டிருக்கும் இந்த அபார் அட்டை மாணவர்களுக்கானது ஆகும்.
+ There are no comments
Add yours