தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு. மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
அனைத்து இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்தை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் வழங்கும் ஊக்கத் தொகை விவரங்களை வரும் 23-ம்தேதிக்குள் stipend23-24@nmc.org.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours