எதிர்விளைவுகளை கட்டுப்படுத்துவதில் இந்தியா முன்னிலை !

Spread the love

பருவநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளை கட்டுப்படுத்துவதில் இந்தியா முன்னிலை வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

தில்லி கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வளாகத்திற்குள் மத்திய அரசின் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ், 4 கோடியாவது மரக்கன்றை அவர் நட்டார்.

அப்போது, பேசிய அவர், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் சிஆர்பிஎப் மூலம் 5 கோடி மரங்கள் நடப்படும் என்றார். மேலும், சுற்றுச்சூழலை பராமரிக்க மரங்களை வளர்ப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து புதிய கட்டடங்களையும் அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours