வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்…. இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Spread the love

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, தான் போட்டியிட்டு வென்ற வாரணாசி தொகுதியில், விளையாட்டு பிரியர்களுக்காக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தரபிரதேச மாநில அரசு சார்பில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ரூ.121 கோடி மதிப்புள்ள நிலத்தை கையகப்படுத்தி கொடுத்து உள்ளார்.

அதில், ரூ.330 கோடியில் இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச தரத்துடன் பிரமாண்ட ஸ்டேடியத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. வாரணாசியின் ராஜதலா பகுதியில் உள்ள கஞ்சாரி கிராமத்தில் இந்த மைதானம் அமைய உள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தை 30 மாதங்களில் இதை கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் வரை அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும். இந்த மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்களும் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், வாரணாசி தொகுதியில் ரூ.1,115 கோடியில் கட்டப்பட்டுள்ள 16 பள்ளிகளையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.

மேலும் அவர், பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவதுடன், கலாச்சார விழாவின் நிறைவு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பிரதமர் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours