முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.. ராகுல் கடும் கண்டனம் !

Spread the love

NEET Application; 2 Days Extension: This is the new date!
2024ம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி அரசால் சீரழிக்கப்பட்ட கல்விமுறையின் மற்றுமோர் எடுத்துக்காட்டுதான் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு என்று அவர் தெரிவித்தார்.

இந்த தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் இன்று (சனிக்கிழமை) சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை சார்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை இதனை தெரிவித்துள்ளது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு வருந்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மோடியின் கையாலாகாத அரசுதான், மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. என்றும் மோடி அரசால் சீரழிக்கப்பட்ட கல்விமுறையின் மற்றுமோர் எடுத்துக்காட்டுதான் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக ஆட்சியில் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை காக்க கல்வியில் கவனம் செலுத்துவதை விட, அரசுடன் போராடுவதில் அதிக கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் மோடி என்றும் அவர் தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours