திமுக சார்பில் நீட் விலக்கு கோரும் கையெழுத்து இயக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு சென்று திருமாவளவனிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.
அனைத்து இயக்கத்தினரையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். இதுவரை 10 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர். 50 லட்சம் கையெழுத்து பிரதிகளை குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours