விஜய்க்கு அட்வைஸ் வழங்கிய அன்புமணி !

Spread the love

நடிகர் விஜய் பல ஆண்டுகளாக அரசியல் ஆசையில் இருந்து வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றி தனிக் கொடியையும் அறிமுகம் செய்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவாக பணியாற்றியது. அதன்பிறகு 10 ஆண்டுகள் வரை தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

இந்த நிலையில் சமீப காலமாக அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். சட்டமன்ற தொகுதிகள் ரீதியாக நிர்வாகிகள், மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணி என ஒரு கட்சிக்கான கட்டமைப்புடன் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அணிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது.

விரைவில் அரசியல் கட்சி தொடக்கம்?

லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய், ‘2026ஆம் ஆண்டு கப்பு முக்கியம் பிகிலு’ என்று கூறி தனது அரசியல் வருகையை வெளிப்படையாக உறுதிப்படுத்தினார். சில நாட்களுக்கு முன்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்சியை பதிவு செய்வதற்காக விஜய் மக்கள் இயக்கத்தின் பிப்ரவரி மாதம் டெல்லி செல்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே விஜய் கட்சி போட்டியிடலாம் என்றெல்லாம் தகவல்கள் பறக்கின்றன.

அன்புமணி ராமதாஸ் அளித்த பதில்

விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பல அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம், விஜய் கூட்டணிக்கு அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு அன்புமணியோ, “இன்னும் கல்யாணமே ஆகவில்லை. அதற்குள் குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே..” என்று பதிலளித்தார். மேலும், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனவும் விஜய்க்கு அட்வைஸ் வழங்கினார்.

கூட்டணி பற்றிய கேள்விக்கு, “இவ்வளவு நாட்கள் பொறுத்துவிட்டீர்கள்.. இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருங்கள். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களுக்கு தொலைபேசி மூலம் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து வந்தார். அன்புமணி பிறந்தநாளுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்த நிலையில், அதற்கு அன்புமணி நன்றி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours