வேட்பாளர் பட்டியல் நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும்-செல்வப்பெருந்தகை !

Spread the love

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பத்திரம் பற்றி பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும் என்றார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ’இந்தியா’ கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் சூறாவளி பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

அப்போது தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் தமிழிசை போட்டியிட்டால், நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் சூழல் ஏற்படலாம் என்று விமர்சித்தார்.

ஓ.பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் எனவும், அன்புமணி, ஜி.கே.வாசனை வைத்துக்கொண்டு குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours