விஷம் வைத்து தெருநாய்களை காலி செய்த அப்பார்ட்மன்ட் வாசிகள்.. வழக்கு பதிவு !

Spread the love

பெங்களூருவில் தெருநாய்களுக்கு விஷம் வைத்து கொன்று புதைத்தாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே உள்ள மகாவீர் ராஞ்சஸ் அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி 15 தெருநாய்கள் சுற்றித்திரிந்தன. இந்த நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மஹாவீர் ராஞ்சஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பிபிஎம்பியிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கைகையும் பிபிஎம்பி எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மகாவீர் ராஞ்சஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நாய்களை கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றபோது, ​​அதிகாரிகளுக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் இடைய மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இரண்டு தெருநாய்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தன. அத்துடன் தெருநாய்களுக்கு விஷம் வைத்து கொன்று அவற்றை புதைத்ததாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மீது புகார் எழுந்தது. இதனால் மஹாவீர் ராஞ்சஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மீது பிபிஎம்பி அதிகாரிகள், காவல் துறையில் புகார் அளித்தனர்.

இதன்பேரில், தெருநாய்களுக்கு விஷம் வைத்து கொன்று அவற்றை புதைப்பதாக அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய்களை சித்ரவதை செய்ததாக ஒரு வழக்கும், விசாரிக்கச் சென்ற பிபிஎம்பி அதிகாரிகளுடன் சண்டையிட்டதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாய்கள் கொல்லப்பட்டது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours