இந்தியாவில் ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோத உள்ளன.
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோகி சர்மா தலைமையிலான மும்பை இந்தியன் அணி தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். தொடர்ந்து 17-வது சீசன் இன்று தொடங்குகிறது.
10 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டு தோறும் கிரிக்கெட் திருவிழா போன்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு கேப்டன் பொறுப்பை இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு வீரராக அணியில் களமிறங்க உள்ளார்.
+ There are no comments
Add yours