பர்படாஸில் புயல் மழை காரணமாக இந்திய அணி வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு!

Spread the love

பர்படாஸ்: டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பர்படாஸில் இருந்து வரமுடியாமல் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக உலககோப்பையை கைப்பற்றியது. வீரர்கள் கோப்பையுடன் தாயகம் திரும்புவதை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்க.. பர்படாஸில் புயல், மழை காரணமாக அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

பார்படாஸில் பலத்த காற்று, மழையுடன் சூறாவளி தாக்கியதால் மின்சாரம், நீர் விநியோகம் பாதிப்பு; ஊரடங்கு உத்தரவால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் வருகை தாமதமாகிக் கொண்டு வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours