குலுக்கல் முறையில் பயணிகளுக்கு பரிசு !

Spread the love

தொலைதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் பயணிக்க, tnstc.in இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்பதிவு செய்து வார நாட்களில் (பண்டிகை நாட்கள், வெள்ளி,சனி, ஞாயிறு நீங்கலாக) பயணிப்பவர்களில் 3 பேரை தேர்வு செய்து, தலா ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டம் ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வார நாட்களில் அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில்,வார நாட்களில் விரைவு பேருந்துகளில் பயணம் செய்தவர்களில் 3 பேரை கணினி குலுக்கல் முறையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தேர்ந்தெடுத்தார்.

அதன்படி, இசக்கி முருகன், சீதா,ஆரிப் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய அமைச்சர், ‘‘அரசு விரைவு பேருந்து சேவையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். தேர்வானவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் விரைவில் வழங்கப்பட உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours