செந்தில் பாலாஜி வழக்கில் 15-ம் தேதி தீர்ப்பு!

Spread the love

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தன்மீதான சட்டவிரோத பணப்பரிமாற்றதடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல்செய்திருந்தார்இதன் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில்தீர்ப்பைவருகிற பிப்ரவரி 15-ம் தேதிக்குசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிஅமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்இந்த வழக்கில் ஜனவரி 22-ம் தேதிகுற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டது.

முன்னதாகபோக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜிமீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்ததுஇந்தவழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை பதிவுசெய்துள்ள வழக்கின் விசாரணையைநிறுத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் 

இதற்கு அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்வழக்கின் விசாரணையை முடக்கிகுற்றச்சாட்டு பதிவையும்சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுஎனவேதகுதியான எந்தக் காரணமும் இல்லாததால்விசாரணையைதள்ளிவைக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours