தேர்தல் முடிந்தாலும் பறக்கும் படை சோதனைகள் தொடரும்!

Spread the love

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்தாலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் நடக்கும்வரை எல்லைகளில் பறக்கும் படை சோதனைகள் தொடரும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. இதன்படி விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறுகையில்,” தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதால், தேர்தல் சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில் கலைக்க இருக்கிறோம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நடக்கும்வரை, அந்த மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பாட்டில் இருக்கும். பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் அப்படியே உள்ளன.

எனவே, பொதுமக்கள் கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் என்ற உச்சவரம்பில் மாற்றம் கிடையாது. வீடியோ குழுக்களின் கண்காணிப்பு, மறு வாக்குப்பதிவு இருந்தால் அதுவரை நீடிக்கும்” என்று கூறினார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours