நேசபிரபுவை சந்தித்த அண்ணாமலை !

Spread the love

தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தியாளராக இருப்பவர் நேசபிரபு. மர்ம நபர்கள் சிலர் தன்னை பின் தொடருவதாக பல்லடம் போலீஸில் புகார் அளித்திருந்தார். ஆனால் போலீஸார் தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி இரவு மர்மநபர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

இதனால் அச்சமடைந்த நேசபிரபு, அங்குள்ள பெட்ரோல் பங்கின் மேலாளர் அறையில் உயிருக்கு பயந்து தஞ்சம் புகுந்தார். அப்போது மர்மநபர்கள் பின்தொடருவதை அறிந்த காவலர் ஒருவரிடம் மர்ம நபர்கள் பின்தொடருவது குறித்து போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். அவர் போனில் பேசிக் கொண்டிருந்தபோதே 5 கார்களில் அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர்.

அப்போது சார் என் லைஃப் முடிஞ்சுது என போனில் கதறினார் நேசபிரபு. ஆனால் அதற்குள் அந்த மர்மநபர்கைள் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் நேச பிரபுவை சரமாரியாக வெட்டினர். இதில் நேசபிரபுவின் உடம்பில் 65 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேசபிரபு காவலரிடம் கதறிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பதற வைத்தது. இதனைக் கேட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த தகவலை அறிந்ததுமே மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் மருத்துவமனையில் நேச பிரபுவை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் செய்தியாளர் நேசபிரபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரது உடல் நிலை குறித்தும் அண்ணாமலை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அந்த போட்டோக்களை அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நேசபிரபுவின் குடும்பத்தாரிடமும் தைரியம் கூறி, தமிழக பாஜக அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நேர்மையான ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகும் குற்றச் சம்பவங்கள், இனி நிகழாமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் கடமை என்றும் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours