கனமழையால் ஸ்ரீவைக்குண்டத்தில் நின்றுள்ள செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சிக்கியவர்கள் நாளை மீட்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலில் உள்ள பயணிகள் வெளியே முடியாமல் தவித்தனர்.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கியவர்கள் நாளை மீட்கப்படுவர். இரவு நேரம் என்பதால் மீட்பதில் சிரமம் ஏற்படும்.
எனவே நாளை (டிச.19) மீட்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளது. அவர்கள் ரயிலில் பாதுகாப்பாக தங்குவதற்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours