தனியார் பேருந்துடன், லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து.! – ஒருவர் பலி!

Spread the love

சென்னையிலிருந்து சிவகங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் கோட்டை அருகே விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் கோட்டை அருகே சென்னையிலிருந்து சிவகங்கை நோக்கிச் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த தனியார் பேருந்துடன், லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்த 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours