மதுரை டூ பெங்களூரு.. ஓட துவங்குகிறது நாளை மற்றுமொரு வந்தே பாரத் ரயில் !

Spread the love

மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் மதுரையிலிருந்து பெங்களூரு வரை வந்தே வாரத்தில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, நாளை முதல் அடுத்த மாதம் ஜூலை 29-ம் தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரையில் இருந்து நாளை முதல் அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சிக்கு காலை 7 மணிக்கு வந்து பின்னர் 7.12 மணிக்கு புறப்பட்டு கரூர், சேலம் வழியாக சென்று, பெங்களூருவுக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக, மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருச்சிக்கு இரவு 7.35 மணிக்கு வந்து 7.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் அதன் பின்னர் மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours