விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவரது பேச்சு திறமையால் அனைவரையும் கைவசம் போட்டு கொண்டார். சமீபத்தில் தனுஷின் நடிப்பில் வெளியான மாரி 2 படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை அறந்தாங்கி நிஷாவின் மகள் மருத்துவமனையில் ICUவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையிழும் தன்னலத்தை வெளிப்படுத்திய பல பிரபலங்களின் பட்டியலில் அவர் இணைந்தார். ஆம், சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கி வந்தார்.
இந்த நிலையில், டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மகள் மருத்துவமனையில் உள்ளதாக சமீபத்தில் நிஷா ஒரு வீடியோவில் பேசியுள்ளார். இதனையடுத்து, அவரது மகள் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
அவரது மகள் மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நிஷாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், நிலமை மெது மெதுவாக சீராகி வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு நடிகர் சூர்யா-கார்த்தி முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, நடிகர் ஹரிஷ் கல்யாணம் ரூ. 1 லட்சம், kpy பாலா ரூ. லட்சம் என பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
+ There are no comments
Add yours