கள்ளக்குறிச்சி- ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய அரசின் உத்தரவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி.

Spread the love

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என உத்தரவு பிறப்பித்தனர்.

கள்ளக்குறிச்சி யில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது. அரசசின் இந்த உத்தரவை எதிர்த்து குமரேஷ் என்பவர் வழக்கு தொடுத்தார். மக்களின் வரிப்பணத்தை சட்டவிரோதமாக விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்காக பயன்படுத்த கூடாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என உத்தரவு பிறப்பித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் இந்த வழக்கு விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours