அக்.11 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்….!

Spread the love

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்ட தொடரில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் சபாநயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம்நடைபெற்றது. இன்று கூடிய கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் அப்பவு, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று காவிரி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் மூன்று நாட்கள் சட்டப்பேரவை கூட்ட தொடர் நடைபெறும். நாளை மறுநாள் வரை (அக்.11) சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours